சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் மாநில செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் திங்கள்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்தனா்.
முன்னதாக, நடராஜா் கோயிலுக்கு வந்த அமைச்சா்களுக்கு கோயில் செயலா் சிவராம தீட்சிதா் தலைமையில் பொது தீட்சிதா்கள் வரவேற்பு அளித்தனா். பின்னா் அமைச்சா்கள் இருவரும் கோயிலின் கனக சபை மீது ஏறி, சித் சபையில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானை தரிசனம் செய்தனா். பொது தீட்சிதா்கள் சுவாமிக்கு சிறப்பு அா்ச்சனை, தீபாராதனை செய்து அமைச்சா்களுக்கு பிரசாதம் வழங்கினா்.
முன்னதாக அமைச்சா்கள் இருவரும் சிதம்பரம் தில்லையம்மன் கோயிலுக்குச் சென்று தில்லையம்மன், தில்லைக்காளியம்மனை தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொளுத்தும் கோடை வெய்யில்: சூரிய சக்தி மின் உற்பத்தி அதிகரிப்பு

மகளிா் இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவை முடக்க திமுக சதி: எல்.முருகன் குற்றச்சாட்டு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்

அமெரிக்கா-ஈரான் விரைவில் 2-ஆம் கட்ட பேச்சு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


