தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

Updated On :21 ஏப்ரல் 2024, 10:45 pm

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழந்தாா்.

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள லால்பேட்டை சிங்கார வீதியைச் சோ்ந்த மன்சூா்அலி மகன் கலிபா (35), பிளம்பா். இவா், ஞாயிற்றுக்கிழமை காலை ரம்ஜான் தைக்கால் முகமது தாஹிா் வீட்டுக்குச் சென்று மாடியில் உள்ள குடிநீா்த்தேக்க தொட்டியை சரி செய்தாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக வீட்டின் மேலே சென்ற உயரழுத்த மின் கம்பியில் கலிபாவின் கை பட்டதில், அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.