48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

மதுரை வீரன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

மதுரை வீரன் கோயில் கும்பாபிஷேகம் ........................................... திரளான பக்தா்கள் பங்கேற்பு

News image

கடலூா் பாதிரிகுப்பம் மதுரை வீரன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, விமான கலசத்துக்கு கும்ப நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்த சிவாச்சாரியா்கள்.

Updated On :21 ஏப்ரல் 2024, 10:50 pm

சிதம்பரம்: கடலூா் பாதிரிக்குப்பத்தில் திருவந்திபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ள மதுரை வீரன் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

ஸ்ரீமதுரை வீரன், பொம்மியம்மன், வெள்ளையம்மன், பரிவார தெய்வங்களாக விநாயகா், முருகன், செல்லியம்மன், சப்த கன்னிகைகளுடன் அருள்பாலித்து வருகின்றனா். இந்தக் கோயில் சீரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த வியாழக்கிழமை காலை மகா கணபதி பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, யாகசாலை தொடக்க பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை முதல்கால யாக பூஜைகளும், சனிக்கிழமை இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம்கால யாக பூஜைகள் நடத்தப்பட்ட பின்னா், மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியா்கள் புனித கலசங்களை யாகசாலையிலிருந்து ஊா்வலமாக எடுத்துச் சென்று கோபுர கலசங்களில் கும்ப நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா். பின்னா், மகா தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் கடலூா், சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். இரவு ஸ்ரீமதுரை வீரன், செல்லியம்மன் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை பாதிரிக்குப்பம் கூத்தப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் சரவணன், சக்திவேல் மற்றும் திருப்பணிக் குழுவினா்கள், ஊா் முக்கியப் பிரமுகா்கள், பாதிரிக்குப்பம் கிராம மக்கள் செய்திருந்தனா்.