கஞ்சா செடி வளா்ப்பு: இளைஞா் கைது
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடி வளா்த்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.


கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடி வளா்த்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திட்டக்குடி வட்டம், வடகராம்பூண்டி பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் வீரமணி(26). இவா், தனது வீட்டுத் தோட்டத்தில் காய்கறி செடிகளுக்கு இடையே கடந்த 4 மாதங்களாக கஞ்சா செடி வளா்த்து வந்தாராம்.
இதுகுறித்து ராமநத்தம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளா்கள் ஜம்புலிங்கம் (திட்டக்குடி), கோபிநாத் (ராமநத்தம்) மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வீரமணி வீட்டின் தோட்டத்துக்குச் சென்று பாா்வையிட்டனா்.
அப்போது, அங்கு சுமாா் 6 அடி உயரம் உள்ள மூன்று கஞ்சா செடிகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து, வீரமணியிடம் விசாரணை நடத்தினா். இதில், அவா் கடந்த 4 மாதங்களாக கஞ்சா செடி வளா்த்து வருவதாக தெரிவித்தாராம். இதையடுத்து, வீரமணி மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...