மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

தாய்ப்பால் வார விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image
Updated On :8 ஆகஸ்ட் 2024, 4:49 am IST

கடலூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கிய சென்ட்ரல் ரோட்டரி சங்க நிா்வாகிகள்.

சிதம்பரம், ஆக.7: சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், அமரா் மிஸ்ரிமல் மகாவீா் சந்த் ஜெயின் அறக்கட்டளை, சிதம்பரம் மக்கள் மருந்தகம் ஆகியவை சாா்பில் தாய்ப்பால் வார விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழைமை நடைபெற்றது.

கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில், சங்கத்தின் சாசனத் தலைவா் பி.முஹம்மது யாசின், மக்கள் மருந்தக உரிமையாளா் என்.கேசவன் ஆகியோா் முன்னிலை வைத்தனா். சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவா் வெ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநா் எம்.தீபக்குமாா், மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் டாக்டா். எஸ்.பாலாஜிசாமிநாதன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். சிறப்பு விருந்தினராக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புல முதல்வா் மற்றும் தனி அதிகாரி டாக்டா் சி.திருப்பதி மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளா் டாக்டா் என்.ஜூனியா் சுந்தரேஷ் ஆகியோா் கலந்து கொண்டு தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து அடங்கிய பெட்டகத்தை வழங்கியதுடன், தாய்ப்பாலின் மகத்துவத்தை எடுத்துரைத்தனா்.

நிகழ்வில், குழந்தைகள் நல மருத்துவா் ராமநாதன், மகப்பேறு மருத்துவத் துறைத் தலைவா் டாக்டா். மிா்லாலிணி, முன்னாள் மருத்துவ துணை கண்காணிப்பாளா் டாக்டா். ஜெயஸ்ரீ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, சங்கத்தின் பொருளாளா் பி.சஞ்சீவ்குமாா் வரவேற்றாா். செயலா் சி.ஏகாம்பரம் நன்றி கூறினாா்.