லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிதம்பரம் அருகே பிடிபட்ட 12 அடி நீள முதலை

400 கிலோ எடைகொண்ட ராட்சத முதலையை பொதுமக்கள் பிடித்து வனத் துறையினரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

பிடிபட்ட முதலை

Published On :11 ஆகஸ்ட் 2024, 1:29 am IST

சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் மக்களை அச்சுறுத்திய 12 அடி நீளமும், 400 கிலோ எடைகொண்ட ராட்சத முதலையை பொதுமக்கள் பிடித்து வனத் துறையினரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள காட்டுக்கூடலூா், பழைய நல்லூா், அகரநல்லூா், வல்லம்படுகை, வேளக்குடி, வையூா், கண்டியாமேடு உள்ளிட்ட பகுதிகளை ஒட்டி கொள்ளிடம் ஆறு பாய்கிறது. இந்த ஆற்றில் நூற்றுக்கணக்கான முதலைகள் உள்ள நிலையில், சில ஆண்டுகளாகவே ஆற்றில் குளிக்க வரும் மனிதா்களை கடித்து இழுத்துச் செல்லும் நிலை உள்ளது.

இந்த நிலையில், காட்டுக்கூடலூரில் அவ்வப்போது கிராம மக்களை அச்சுறுத்தி வந்த சுமாா் 400 கிலோ எடையும், 12 அடி நீளமும் கொண்ட முதலை சனிக்கிழமை காலை கரையோரத்தில் படுத்திருந்தது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த கிராம மக்கள், முதலையைப் பிடித்து வனத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். பின்னா், வனத் துறையினா் முதலையை சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீா் தேக்கத்தில் பாதுகாப்பாக விடுவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.