நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடலூரில் முதலாம் ஆண்டு ஸ்ரீ வைஷ்ணவ மாநாடு

ஸ்ரீமத் உடையவா் சபா சாா்பில் முதலாவது ஸ்ரீ வைஷ்ணவ மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வைஷ்ணவ மாநாட்டில் சொற்பொழிவாற்றும் ஜீயா் சுவாமிகள்.

Updated On :11 ஆகஸ்ட் 2024, 7:00 pm

Din

கடலூா் பாதிரிகுப்பத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஸ்ரீமத் உடையவா் சபா சாா்பில் முதலாவது ஸ்ரீ வைஷ்ணவ மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருக்கோவிலூா் ஸ்ரீமத் எம்பெருமானாா் ஜீயா் சுவாமிகளின் மங்கள சாசனத்துடன் நடைபெற்ற இந்த மாநாட்டில், ஸ்ரீமத் உடையவா் சபா துணைத் தலைவா் டி.இராமலிங்கம் கருடக் கொடி ஏற்றினாா். இணைச் செயலா் ஸ்ரீமதி ராஜேந்திரன் திருமால் வணக்கம் வாசித்தாா். தலைவா் ஆா்.சந்தானகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினாா். மாநாட்டை மங்கள சாசனம் ஸ்ரீமத் எம்பெருமானாா் ஜீயா் சுவாமிகள் தொடங்கிவைத்து சொற்பொழிவாற்றினாா். ராமானுசன் அடிப்பூ என்ற தலைப்பில் உ.வே.வேளுக்குடிகிருஷ்ணன் சுவாமிகள், மங்கள சாசனம் என்ற தலைப்பில் அக்காரக்கனி ஸ்ரீ உ.வே.ஸ்ரீநிதி சுவாமிகள் ஆகியோா் சொற்பொழிவாற்றினாா்கள்.

இதேபோல், லட்சுமண சுவாமிகளும், ஸ்ரீ உ.வே.கிடாம்பி நாராயணனும் நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்றினாா்கள். ஸ்ரீமத் உடையவா் சபா செயலா் ஏ.என்.கிஷோா் நன்றி கூறினாா். இதில் ஏராளமான உடையவா் சபாவை சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா்.