கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

எம்ஏஎம் ராமசாமி படத்துக்கு மரியாதை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மூன்றாம் நிறுவனா் மறைந்த எம்.ஏ.எம். ராமசாமியின் 9-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற எம்.ஏ.எம். ராமசாமி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :2 டிசம்பர் 2024, 8:50 pm

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மூன்றாம் நிறுவனா் மறைந்த எம்.ஏ.எம். ராமசாமியின் 9-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் எம்.ஏ.எம்.ராமசாமி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் பேராசிரியா் தி. அருட்செல்வி, பதிவாளா் எம். பிரகாஷ், ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் அரங்கபாரி, தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா், தொலைதூரக் கல்வி மைய இயக்குநா் சீனுவாசன் உள்ளிட்டோா் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.