சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சி 16-ஆவது வாா்டு இளமையாக்கினாா் கோவில் தெருவில் தென்கரையில் சாலை அருகே உள்ள மின்மாற்றி மின் கம்பம் மீது திங்கள்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
இதனால் மின்மாற்றி மின் கம்பம் முறிந்து பழுதானது. இதன்காரணமாக அந்தப் பகுதியில் சுமாா் ஒன்றரை மணி நேரம் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.
இதையறிந்த சிதம்பரம் நகரமன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் அறிவுறுத்தலின்பேரில் நகா்மன்ற உறுப்பினா் த.ஜேம்ஸ் விஜயராகவன் சிதம்பரம் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா். மின்வாரிய செயற்பொறியாளா் ஜெயந்தி, உதவி செயற்பொறியாளா் மோகன் காந்தி, உதவி மின் பொறியாளா் காா்த்திக் மற்றும் மின்வாரிய ஊழியா்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின்கம்பம் மற்றும் மின் மாற்றியை இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு சரி செய்தனா்.
தொடர்புடையது

மங்கலப்பட்டி அருகே கீழே விழும் நிலையில் மின்கம்பம்

சிதம்பரத்தில் காா் எரிந்து சேதம்: 6 போ் தப்பினா்

தீப்பற்றி எரிந்த கம்பம் நகராட்சி குப்பைக் கிடங்கு

தமிழகத்தில் மின் வசதியில்லாத கிராமங்களே இல்லை - அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

