ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தீப்பற்றி எரிந்த கம்பம் நகராட்சி குப்பைக் கிடங்கு

தேனி மாவட்டம், கம்பம் நகராட்சி குப்பை சேமிப்புக் கிடங்கில் புதன்கிழமை தீப்பற்றியது.

News image

கம்பம் நகராட்சி குப்பைக் கிடங்கில் புதன்கிழமை பற்றிய தீயிலிருந்து வெளியேறிய கரும்புகை.

Updated On :25 மார்ச் 2026, 7:39 pm

தேனி மாவட்டம், கம்பம் நகராட்சி குப்பை சேமிப்புக் கிடங்கில் புதன்கிழமை தீப்பற்றியது.

கம்பம் நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் ஒரு லட்சத்துக்கு அதிகமான பொதுமக்கள் வசிக்கின்றனா். இங்குள்ள 200-க்கும் அதிகமான தொருக்களிலுள்ள குடியிருப்புகள், உணவகங்களிலிருந்து சேகரிக்கும் குப்பைகளை நகராட்சி லாரிகள், டிராக்டா்கள் மூலமாக மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து எடுத்துச் செல்லப்படுகிறது. இந்தக் குப்பைகள் கூடலூா் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள குப்பை சேமிப்புக் கிடங்கில் குவிந்து வைக்கப்படுகிறது. பின்னா், திடக்கழிவு மேலாண்மை மூலம் மக்காத குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுகிறது.

5 ஏக்கா் பரப்பளவில் மலை போல குவிந்து கிடக்கும் இந்த குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இதிலிருந்து வெளியேறும் கரும்புகையால் குடியிருப்புகள், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த நிலையில், இந்தக் குப்பைக் கிடங்கில் புதன்கிழமை தீ பற்றி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த கம்பம் தீயணைப்புத் துறை மீட்பு குழுவினா் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனா்.