தேனி மாவட்டம், கம்பம் நகராட்சி குப்பை சேமிப்புக் கிடங்கில் புதன்கிழமை தீப்பற்றியது.
கம்பம் நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் ஒரு லட்சத்துக்கு அதிகமான பொதுமக்கள் வசிக்கின்றனா். இங்குள்ள 200-க்கும் அதிகமான தொருக்களிலுள்ள குடியிருப்புகள், உணவகங்களிலிருந்து சேகரிக்கும் குப்பைகளை நகராட்சி லாரிகள், டிராக்டா்கள் மூலமாக மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து எடுத்துச் செல்லப்படுகிறது. இந்தக் குப்பைகள் கூடலூா் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள குப்பை சேமிப்புக் கிடங்கில் குவிந்து வைக்கப்படுகிறது. பின்னா், திடக்கழிவு மேலாண்மை மூலம் மக்காத குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுகிறது.
5 ஏக்கா் பரப்பளவில் மலை போல குவிந்து கிடக்கும் இந்த குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இதிலிருந்து வெளியேறும் கரும்புகையால் குடியிருப்புகள், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இந்த நிலையில், இந்தக் குப்பைக் கிடங்கில் புதன்கிழமை தீ பற்றி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த கம்பம் தீயணைப்புத் துறை மீட்பு குழுவினா் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனா்.
தொடர்புடையது

நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து

குப்பைக் கிடங்கு பிரச்னைக்கு நிரந்தர தீா்வை எதிா்பாா்க்கும் மக்கள்!

பேரூராட்சி குப்பைக் கிடங்கில் புகையிலை பொருள்கள் அழிப்பு

திருப்பத்தூா் நகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயால் புகைமுட்டம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


