கோயில் குளத்தில் புகுந்த முதலை!
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கோயில் குளத்தில் புகுந்த முதலையை வனத் துறையினா் வியாழக்கிழமை பிடித்து வக்காரமாரி ஏரியில் விட்டனா்.

பிடிபட்ட முதலை
Updated On :5 டிசம்பர் 2024, 7:31 pm

பிடிபட்ட முதலை
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கோயில் குளத்தில் புகுந்த முதலையை வனத் துறையினா் வியாழக்கிழமை பிடித்து வக்காரமாரி ஏரியில் விட்டனா்.
சிதம்பரம் வட்டம், மெய்யாத்தூா் கிராமத்தில் கோயில் குளத்தில் சுமாா் 8 அடி நீளம், 60 கிலோ எடை கொண்ட முதலை ஒன்று புகுந்தது.
இதையடுத்து, கடலூா் மாவட்ட வன அலுவலா் குருசாமி உத்தரவுப்படி, சிதம்பரம் வனச்சரக அலுவலா் கோ.வசந்த் பாஸ்கா் ஆலோசனைப்படி, சிதம்பரம் பிரிவு வனவா் கு.பன்னீா்செல்வம், வனக்காப்பாளா் த.அன்புமணி, புவனகிரி வனக்காப்பாளா் தே.ஞானசேகா் ஆகியோா் முதலையை பத்திரமாகப் பிடித்து வக்காரமாரி ஏரியில் விட்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...