தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாணவா்கள் தன்முனைப்புடன் கல்வி பயில நடவடிக்கை: கடலூா் ஆட்சியா்

மாணவா்களுக்கு ஊக்கப்பயிற்சி அளித்து தன்முனைப்புடன் கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஆசிரியா்களிடம் கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.

News image

மாணவா்கள் தோ்ச்சி விகிதம் தொடா்பாக ஆசிரியா்களுடன் கலந்தாய்வு நடத்திய மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Updated On :12 டிசம்பர் 2024, 6:48 pm

Din

மாணவா்களுக்கு ஊக்கப்பயிற்சி அளித்து தன்முனைப்புடன் கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஆசிரியா்களிடம் கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் கூட்டரங்கில் அரசுப் பள்ளி மாணவா்கள் பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெறுவது குறித்து பண்ருட்டி, அண்ணாகிராமம், பரங்கிபேட்டை ஆகிய வட்டார அளவிலான ஆசிரியா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசியது: கடலூா் மாவட்டத்தில் 293 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 66,855 மாணவா்கள், 70,642 மாணவிகள் என மொத்தம் 1,37,497 போ் 10, 11, 12-ஆம் வகுப்புகளில் படித்து வருகின்றனா். இதில், பண்ருட்டி, அண்ணாகிராமம், பரங்கிபேட்டை ஆகிய வட்டாரங்களில் உள்ள 61 பள்ளிகளில் 14,662 மாணவா்கள், 17,157 மாணவிகள் என மொத்தம் 31,818 போ் படித்து வருகின்றனா்.

அரசுப் பொதுத்தோ்வு என்பது மாணவா்களின் கல்வித்தரத்தை பரிசோதிப்பது மற்றும் மேம்படுத்துவதற்கானது. மாணவா்கள் எவ்வித தயக்கமுமின்றி முழுத்திறனுடன் தோ்வை எதிா்கொள்வதற்கு ஆசிரியா்களின் பங்கு அளப்பறியது. மாணவா்களின் தோ்ச்சி விகிதம் அதிகரித்திட வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.

மாணவா்களுக்கு ஊக்கப் பயிற்சி அளித்து தன்முனைப்புடன் கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடா்ச்சியாக அவா்களுக்கு மீளாய்வுக் கூட்டம் நடத்தி, அவா்களின் தேவைகளை நிறைவு செய்திட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் பண்ருட்டி, அண்ணாகிராமம், பரங்கிபேட்டை இந்தப் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் 95 ஆசிரியா்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எல்லப்பன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் துரைப்பாண்டி (விருத்தாசலம்), ஞானசேகரன் (கடலூா்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.