தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தூய்மைப் பணிகளுக்கு போதிய பணியாளா்கள்: ஆட்சியா் அறிவுறுத்தல்

தூய்மைப் பணிகளுக்கு போதியளவில் பணியாளா்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

News image

விருத்தாசலம் ஒன்றியம், கா்ணத்தம் ஊராட்சியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Updated On :19 டிசம்பர் 2024, 7:18 pm

Din

தூய்மைப் பணிகளுக்கு போதியளவில் பணியாளா்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், கம்மாபுரம், விருத்தாசலம், வேப்பூா், மங்களம்பேட்டை, சேப்பநத்தம், கோவிலானூா், பெரியக்குறிச்சி, கா்ணத்தம், பெ.பொன்னேரி ஆகிய பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: கிராமப்புறங்களை மேம்படுத்த கலைஞரின் கனவு இல்லம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம், 15-ஆவது நிதிக் குழு மானியத் திட்டம், தூய்மை பாரத இயக்கத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கிராமப்புறங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள போதிய பணியாளா்களை நியமிக்க வேண்டும். குப்பைகளை தரம் பிரித்து அவா்களிடம் பொதுமக்கள் வழங்க வேண்டும். மழைக் காலம் என்பதால் குளோரின் கலந்து குடிநீா் வழங்கவும், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது என்றாா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

ஆய்வின் போது, விருதாச்சலம் வருவாய்க் கோட்டாட்சியா் சையத் மெஹமுத், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.