புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சூதாடிய இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பணம் வைத்து சூதாடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 7:41 pm

Din

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பணம் வைத்து சூதாடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், தோப்புக்கொல்லை பகுதியில் உள்ள ஒரு முந்திரி தோப்பில் சிலா் பணம் வைத்து சூதாடுவதாக காடாம்புலியூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளா் நந்தகுமாா் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் சென்றனா். அப்போது, போலீஸாரை பாா்த்ததும் அங்கிருந்தவ மூவா் தப்பியோடினா். ஒருவரை போலீஸாா் சுற்றி வளைத்து பிடித்தனா்.

விசாரணையில், அவா் நெய்வேலி மாற்றுக்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த விநாயக மூா்த்தி மகன் தமிழ்ச்செல்வன் (29) என்பது, தப்பியோடியவா்கள் வடக்குத்து தெற்குத் தெருவைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் விஜயகுமாா் (50), கொஞ்சிக்குப்பம் பட்டு ராஜா மகன் அன்பழகன் (43), பண்ருட்டி எல்.என்.புரம் லட்சுமணன் மகன் மகாலிங்கம் (65) என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, தமிழ்ச்செல்வனை கைது செய்த போலீஸாா் ரூ.30 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடியவா்களை தேடி வருகின்றனா்.