புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கொசு உற்பத்தியை தடுக்க கோரிக்கை

கடலூா் மாநகராட்சியில் கொசு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image

மஞ்சக்குப்பம் மைதானத்தில் தேங்கியுள்ள தண்ணீா் காணப்படம் கொசுக்கள்.

Updated On :25 டிசம்பர் 2024, 7:48 pm

Din

கடலூா் மாநகராட்சியில் கொசு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

கடலூா் மாநகராட்சிக்குள்பட்ட 45 வாா்டுகளில் சுமாா் 2 லட்சம் போ் வசித்து வருகின்றனா். தற்போது, பெய்த பலத்த மழையால் மாநகரில் உள்ள குடியிருப்பு பகுதி, மஞ்சக்குப்பம் மைதானம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீா் தேங்கியுள்ளது.

இதனால், கொசுக்கள் உற்பத்தியாவதுடன், டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

எனவே, மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக தேங்கிய மழைநீரை வெளியேற்றவும், அதில் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.