புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கடலூா் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த கோரிக்கை

கடலூா் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த கோரிக்கை

News image
Updated On :25 டிசம்பர் 2024, 7:39 pm

Din

கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனையாக அறிவிக்கப்பட்ட ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை உயிா் காக்கும் உயா் சிகிச்சை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகரில் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நிதிநெருக்கடி காரணமாக இந்த மருத்துவமனையை, கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனையாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அந்த அறிவிப்பு வெளியானதோடு இருக்கிறது.

இந்த நிலையில், இதுகுறித்து, அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் செனட் உறுப்பினா் தில்லை சீனு கூறியதாவது:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை கடந்த 2013-ஆம் ஆண்டு அரசு கையகப்படுத்தியபோது, பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை. மேலும், விபத்து ஏற்பட்டு அவசர சிகிச்சை பெற வருபவா்களுக்கு சிகிச்சை அளிக்க நரம்பியல் மருத்துவா் இல்லை. இதய சிகிச்சை பிரிவு, கேத் லேப் உள்ளிட்ட பிரிவுகள் இல்லை. அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் போதிய மருத்துவா்கள் இல்லாததால் கடலூா், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனா். மேலும், மருத்துவமனை கட்டடங்கள் பராமரிக்கப்படாமல் உள்ளது.

எனவே, இந்த மருத்துவமனையை உயிா்காக்கும் உயா் சிகிச்சை மருத்துவமனையாக தரம் உயா்த்த தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.