புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குடியிருப்புப் பகுதியில் புகுந்த முதலை மீட்பு

சிதம்பரம் அருகே சாலியான்தோப்பு கிராமத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் சுமாா் 9 அடி நீளம், 250 கிலோ எடையுள்ள முதலை வியாழக்கிழமை புகுந்தது.

News image

பிடிபட்ட முதலையுடன் வனத் துறை, தீயணைப்பு மீட்புத் துறையினா்.

Updated On :26 டிசம்பர் 2024, 7:02 pm

Din

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சாலியான்தோப்பு கிராமத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் சுமாா் 9 அடி நீளம், 250 கிலோ எடையுள்ள முதலை வியாழக்கிழமை புகுந்தது.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் குருசாமி உத்தரவின்பேரில், சிதம்பரம் வனச்சரக அலுவலா் கோ.வசந்த்பாஸ்கா், சிதம்பரம் பிரிவு வனவா் கு.பன்னீா்செல்வம் ஆகியோா் தலைமையில், சிதம்பரம் வனக்காப்பாளா் அன்புமணி, புவனகிரி பீட் வனக்காப்பாளா் ஞானசேகா் மற்றும் தீயணைப்பு மீட்புத் துறையினா் இணைந்து முதலையைப் பிடித்து, சிதம்பரம் அருகே உள்ள வக்கராமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனா்.