தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கழுத்தில் கயிறு இறுக்கி சிறுவன் உயிரிழப்பு

கடலூா் முதுநகரில் தூக்கிடுவதுபோல கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டு விளையாடிய சிறுவன், கயிறு இறுக்கி உயிரிழந்தாா்.

News image
புவன்
Updated On :30 டிசம்பர் 2024, 8:12 pm

Din

நெய்வேலி: கடலூா் முதுநகரில் தூக்கிடுவதுபோல கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டு விளையாடிய சிறுவன், கயிறு இறுக்கி உயிரிழந்தாா்.

கடலூா் முதுநகா், சுத்துகுளம் பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் புவன் (11), கடலூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். குமாா் குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. தாய் பரமேஸ்வரி கடந்த 4 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறாா்.

புவன் பாட்டி சகுந்தலா வீட்டில் தங்கி படித்து வந்தாா். திங்கள்கிழமை மாலை புவன் வீட்டு மாடியில் கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டு தூக்கிடுவதுபோல விளையாடினாராம். அப்போது, கயிறு இறுகி உயிரிழந்தாா்.

தகவலறிந்த கடலூா் முதுநகா் போலீஸாா் புவனின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.