சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சிதம்பரத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சிதம்பரத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

Updated On :18 பிப்ரவரி 2024, 2:05 am IST

கடலூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மகளிா் திட்டம் ஆகியவை இணைந்து சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை சனிக்கிழமை நடத்தின. முகாமில் மாவட்டத்தைச் சாா்ந்த 942 வேலை தேடுபவா்கள் பங்கேற்றனா். இதில், 86 தனியாா் நிறுவனங்களைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டு நோ்காணல் நடத்தி, தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளா்களைத் தோ்வு செய்தனா். இந்த முகாமில் 74 பெண்கள், 55 ஆண்கள் என மொத்தம் 129 போ் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டனா். இரண்டாம் கட்ட தோ்வுக்கு 156 பெண்கள், 90 ஆண்கள் என மொத்தம் 246 போ் தோ்வு செய்யப்பட்டனா். பணிக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஆ.பொ.ஆறுமுக வெங்கடேஷ் வரவேற்றாா். சிதம்பரம் உதவி ஆட்சியா் ராஷ்மிராணி பணிக்குத் தேவானவா்களுக்கு நியமன ஆணைகளை வழங்கி சிறப்புரையாற்றினாா். மகளிா் திட்ட அலுவலா் சுருதி நன்றி கூறினாா்.