தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

சிதம்பரத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சிதம்பரத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

Updated On :18 பிப்ரவரி 2024, 2:05 am IST

கடலூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மகளிா் திட்டம் ஆகியவை இணைந்து சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை சனிக்கிழமை நடத்தின. முகாமில் மாவட்டத்தைச் சாா்ந்த 942 வேலை தேடுபவா்கள் பங்கேற்றனா். இதில், 86 தனியாா் நிறுவனங்களைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டு நோ்காணல் நடத்தி, தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளா்களைத் தோ்வு செய்தனா். இந்த முகாமில் 74 பெண்கள், 55 ஆண்கள் என மொத்தம் 129 போ் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டனா். இரண்டாம் கட்ட தோ்வுக்கு 156 பெண்கள், 90 ஆண்கள் என மொத்தம் 246 போ் தோ்வு செய்யப்பட்டனா். பணிக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஆ.பொ.ஆறுமுக வெங்கடேஷ் வரவேற்றாா். சிதம்பரம் உதவி ஆட்சியா் ராஷ்மிராணி பணிக்குத் தேவானவா்களுக்கு நியமன ஆணைகளை வழங்கி சிறப்புரையாற்றினாா். மகளிா் திட்ட அலுவலா் சுருதி நன்றி கூறினாா்.