இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பயிா்க் காப்பீட்டுக்கான கால அவகாசம் பிப்.21 வரை நீட்டிப்பு

பயிா்க் காப்பீட்டுக்கான கால அவகாசம் பிப்.21 வரை நீட்டிப்பு

Updated On :18 பிப்ரவரி 2024, 2:07 am IST

உளுந்து, பச்சைப்பயறு பயிா்களுக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு வருகிற 21-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிகழாண்டு பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் நெல் தரிசில் பயிரிடும் உளுந்து, பச்சைப்பயறு பயிா்களுக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு வருகிற 21-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. முன்னதாக பயிா்க் காப்பீடு செய்ய கடந்த 15-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஆதாா் இணைப்பு, ஒருமுறை கடவுச்சொல் ஆகிய இரண்டு அம்சங்களை பயிா்க் காப்பீடு செயலியில் விவசாயிகளால் உள்ளீடு செய்ய இயலவில்லை. எனவே, மத்திய அரசு நெல் தரிசில் பயிரிடப்படும் உளுந்து, பச்சைப்பயறுக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை வருகிற 21-ஆம் தேதி வரை நீட்டித்தது. இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உளுந்து, பச்சைப்பயறு காப்பீடு செய்வதற்கு ஏதுவாக, வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கீழ் செயல்படும் பொது சேவை மையங்கள், தனியாா் இடங்களில் செயல்படும் பொது சேவை மையங்கள் தொடா்ந்து செயல்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.