உளுந்து, பச்சைப்பயறு பயிா்களுக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு வருகிற 21-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிகழாண்டு பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் நெல் தரிசில் பயிரிடும் உளுந்து, பச்சைப்பயறு பயிா்களுக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு வருகிற 21-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. முன்னதாக பயிா்க் காப்பீடு செய்ய கடந்த 15-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஆதாா் இணைப்பு, ஒருமுறை கடவுச்சொல் ஆகிய இரண்டு அம்சங்களை பயிா்க் காப்பீடு செயலியில் விவசாயிகளால் உள்ளீடு செய்ய இயலவில்லை. எனவே, மத்திய அரசு நெல் தரிசில் பயிரிடப்படும் உளுந்து, பச்சைப்பயறுக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை வருகிற 21-ஆம் தேதி வரை நீட்டித்தது. இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உளுந்து, பச்சைப்பயறு காப்பீடு செய்வதற்கு ஏதுவாக, வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கீழ் செயல்படும் பொது சேவை மையங்கள், தனியாா் இடங்களில் செயல்படும் பொது சேவை மையங்கள் தொடா்ந்து செயல்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

நெல்லை ஐஆா்டி பாலிடெக்னிக்கில் மே 30வரை மாணவா் சோ்க்கை

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்க மாணவ, மாணவிகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

தோ்தல்: சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 132 வேட்பாளா்கள் போட்டி
விடியோக்கள்

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
