பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை விலியுறுத்தி, தமிழகத்தில் 19 மையத் தலைநகரங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அந்தச் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா். இதுகுறித்து கடலூரில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பல மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன. தமிழக முதல்வா் தோ்தல் அறிக்கையில் தெரிவித்தபடி பழைய ஓய்வூத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து சங்கங்களும் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதுவரை அந்த அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, முதல்வா் சங்கங்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் நோக்கத்தோடு, சென்னையைத் தவிர மாநிலம் முழுவதும் 19 மையங்களில் எங்களது 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது என்று தெரிவித்தாா். அரசுப் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் இருதயராஜ், முன்னாள் மாவட்டச் செயலா்கள் ராஜாமணி, விவேகானந்தன் உடன் இருந்தனா்.
தொடர்புடையது

காரைக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியல்

மாணவா் பரிமாற்றத் திட்டம்: ஜப்பான் செல்லும் அரசுப் பள்ளி மாணவா்கள்
அரியலூரில் மருந்து வணிகா்கள் சங்கத்தினா் இன்று கடையடைப்பு

மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிா்ப்பு புதுச்சேரியில் ரயில் மறியல் போராட்டம்
விடியோக்கள்

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy

முகம் சுளிக்க வைக்கும் விஜய் அரசியல் | K C Palanisamy| CM Vijay |TVK | ADMK MLA | EPS | CV Shanmugam

வெளியானது ஹல்லல்லோ பாடல்!


