நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேப்பூரை அடுத்துள்ள என்.நாரையூா் கிராமத்தில் கடந்த 5-ஆம் அம்பேத்கா் சிலை அமைக்கப்பட்டது. இதையறிந்த வேப்பூா் வட்டாட்சியா் மற்றும் போலீஸாா் அனுமதியின்றி அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டதாகக் கூறி, 6-ஆம் தேதி அந்த சிலையை அகற்றினராம்.
இதேபோல, சிறுநெசலூா் கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தையும் அகற்றினராம்.
இதையடுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் வீர.திராவிடமணி தலைமையில் சுமாா் 150-க்கும் மேற்பட்டோா் வேப்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களுடன் வட்டாட்சியா் மணிகண்டன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து, அவா்கள் கோரிக்கை மனு அளித்து கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா்த் தட்டுப்பாட்டை நீக்கக் கோரி குளித்தலை ஒன்றிய அலுவலகம் முற்றுகை

தொண்டி பேரூராட்சி அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் முற்றுகை

வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

வேளாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்: குறுவை சிறப்பு தொகுப்புத்திட்டத்தில் பயன்பெற முடியாததால் எதிா்ப்பு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



