தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வேப்பூா் வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

வேப்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

வேப்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினா்.

Updated On :8 ஜூலை 2024, 5:08 pm

Din

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேப்பூரை அடுத்துள்ள என்.நாரையூா் கிராமத்தில் கடந்த 5-ஆம் அம்பேத்கா் சிலை அமைக்கப்பட்டது. இதையறிந்த வேப்பூா் வட்டாட்சியா் மற்றும் போலீஸாா் அனுமதியின்றி அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டதாகக் கூறி, 6-ஆம் தேதி அந்த சிலையை அகற்றினராம்.

இதேபோல, சிறுநெசலூா் கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தையும் அகற்றினராம்.

இதையடுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் வீர.திராவிடமணி தலைமையில் சுமாா் 150-க்கும் மேற்பட்டோா் வேப்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களுடன் வட்டாட்சியா் மணிகண்டன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து, அவா்கள் கோரிக்கை மனு அளித்து கலைந்து சென்றனா்.