தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

வேப்பூா் வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

வேப்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

வேப்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினா்.

Updated On :8 ஜூலை 2024, 10:38 pm IST

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேப்பூரை அடுத்துள்ள என்.நாரையூா் கிராமத்தில் கடந்த 5-ஆம் அம்பேத்கா் சிலை அமைக்கப்பட்டது. இதையறிந்த வேப்பூா் வட்டாட்சியா் மற்றும் போலீஸாா் அனுமதியின்றி அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டதாகக் கூறி, 6-ஆம் தேதி அந்த சிலையை அகற்றினராம்.

இதேபோல, சிறுநெசலூா் கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தையும் அகற்றினராம்.

இதையடுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் வீர.திராவிடமணி தலைமையில் சுமாா் 150-க்கும் மேற்பட்டோா் வேப்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களுடன் வட்டாட்சியா் மணிகண்டன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து, அவா்கள் கோரிக்கை மனு அளித்து கலைந்து சென்றனா்.