நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கடலூா் போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :9 ஜூலை 2024, 6:57 pm

Din

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அடுத்துள்ள கரும்பூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ராஜேஷ்(23). இவா், 15 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், புத்தூா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு கடலூா் போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணை முடிந்த நிலையில், ராஜேஷூக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி லட்சுமி ரமேஷ் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.