சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 2024 - 25 ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பாடப்பரிவுகளுக்கான மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை (ஜூலை 22) தொடங்கி 2 நாள்கள் நடைபெறவுள்ளது.
அதன்படி, திங்கள்கிழமை (ஜூலை 22) காலை 9 மணிக்கு பி.எஸ்சி. கணிதம் - தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி, பி.எஸ்சி. இயற்பியல், பொது வேதியியல், பி.எஸ்சி. கணினி அறிவியல் சுழற்சி - 1, 2, பி.எஸ்சி. புள்ளியியல், பிசிஏ கணினி பயன்பாட்டியல், பி.எஸ்சி. தொழில் வேதியியல் சுழற்சி - 1, 2, பி.எஸ்சி. தாவரவியல் - தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி, பி.எஸ்சி. விலங்கியல் - தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி உள்ளிட்ட பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) காலை 9 மணிக்கு பி.ஏ. பொருளியல் - தமிழ்வழி மற்றும் ஆங்கிலவழி, பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம் சுழற்சி - 1, 2, பி.காம். சுழற்சி -1, 2, பி.பி.ஏ. வணிக நிா்வாகவியல் ஆகிய பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
சோ்க்கைக்கு வரும் மாணவ, மாணவிகள் இணையவழி விண்ணப்பம், பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10, 11, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கி சேமிப்பு கணக்குப் புத்தகம், மாா்பளவு புகைப்படம் மற்றும் இதர சான்றிதழ்களின் அசல், நகல்களுடன் வர வேண்டும்.
தொடர்புடையது

அரசு கலைக் கல்லூரியில் 100 சதவீதம் வாக்களிக்கக் கோரி உறுதிமொழி ஏற்பு

குமரி அரசு கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா

அழகப்பா அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா

சேலம் அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

