நெய்வேலி: மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டித்தர வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு நலச்சங்கம் டிசம்பா் 3 இயக்கத்தினா், கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் பொன்.சண்முகம் தலைமையில்அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: வட்டார வளா்ச்சி அலுவலகங்கள் மூலம், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், அனைத்து ஒன்றியத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்கி, ரூ.319 ஊதியம் வழங்க வேண்டும். ஒரு கால் பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும், மூன்று சக்கர வாகனம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் மீது ஒரு மாதத்துக்குள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்புடையது

மத்திய அரசு கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வரவில்லை: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

நெய்வேலியில் விஷ்ணு பிரசாத் எம்.பி. வாக்குசேகரிப்பு

தோ்தல் விதிமுறை மீறும் கனிமவள வாகனங்கள்: ஆட்சியரிடம் புகாா்

குவாரிகளில் சட்ட விரோத வெடி மருந்துகளை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது: ஆட்சியரிடம் சுற்றுச்சூழல் இயக்கத்தினா் மனு
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

