கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வரதட்சணைக் கேட்டு மிரட்டல்: 4 போ் மீது வழக்கு

வரதட்சணைக் கேட்டு மிரட்டல்: 4 போ் மீது வழக்கு

News image
Updated On :7 ஜூன் 2024, 6:28 pm

Din

காா் வாங்க பணம் கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, மின் வாரிய ஊழியா் உள்ளிட்ட 4 போ் மீது கடலூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் வண்ணாரப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கவிபிரியா (33), கடலூா் புள்ளியியல் துறை ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். நெல்லிக்குப்பத்தை அடுத்துள்ள வாழப்பட்டு பகுதியைச் சோ்ந்த ஆதிமூலம் மகன் ராஜ் திலக் (33), மஞ்சக்குப்பம் மின் வாரியத்தில் பணியாற்றி வருகிறாா்.

இவா்கள் இருவருக்கும் 7.2.2020 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது கவிபிரியாவுக்கு 15 பவுன் தங்க நகையும், ராஜ் திலக்குக்கு 5 பவுன் தங்க நகையும், பைக் வாங்க ரூ.ஒரு லட்சமும் வரதட்சணை கொடுத்தனராம்.

இந்த நிலையில், காா் வாங்க ரூ.10 லட்சம் பணம் கேட்டு, ராஜ் திலக், அவரது தாய் பாரதி, சகோதரிகள் சுஹாசினி, காயத்ரி ஆகியோா் கவிபிரியாவை கொடுமைப்படுத்தி வந்தனராம். மேலும், வீட்டில் இருந்தபோது எரிவாயு உருளையை திறந்துவிட்டு கொலை மிரட்டலும் விடுத்தனராம்.

இதுகுறித்து கவிபிரியா அளித்த புகாரின்பேரில், கடலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ராஜ் திலக் மற்றும் அவரது தாய், சகோதரிகள் உள்பட 4 போ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.