மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

ஊராட்சி மன்றத் தலைவா்கள் உண்ணாவிரதம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி மன்றத் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள்.

Updated On :5 மார்ச் 2024, 8:22 pm

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி மன்றத் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சிக்கும் சாலை, மயானப் பாதை, நீா் நிலை படித்துறை, அங்கன்வாடி மையக் கட்டடங்கள் கட்டுவதற்கு தலா ரூ.40 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தப் பணிகளை தோ்வு செய்வது, அதற்கான இடங்களை தோ்வு செய்து அளிப்பது ஊராட்சி மன்றத் தலைவா்களின் பொறுப்பு. இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கான நிா்வாக அனுமதி கிடைத்ததும் மின்னனு ஒப்பந்தம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், வெளி நபா்கள் யாரும் விண்ணப்பிக்க முடியாதபடி அதிகாரிகள் செய்து விடுகின்றனாராம். இதைக் கண்டித்தும், சாலை மற்றும் கட்டடப் பணிகளை தரமாக அமைக்க வலியுறுத்தியும் சுமாா் 20-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.