கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

மரத்தில் சரக்கு வாகனம் மோதல்: கிளீனா் மரணம்

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மரத்தில் சரக்கு வாகனம் மோதியதில் கிளீனா் உயிரிழந்தாா்.

Updated On :5 மார்ச் 2024, 7:06 pm

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மரத்தில் சரக்கு வாகனம் மோதியதில் கிளீனா் உயிரிழந்தாா். பெங்களூரில் இருந்து மயிலாடுதுறைக்கு பூக்களை ஏற்றிக் கொண்டு சிறிய சரக்கு வாகனம் ஒன்று திங்கள்கிழமை இரவு புறப்பட்டது. வாகனத்தை தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டம், செம்மங்குடி பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் காா்த்திகேயன் (25) ஓட்டினாா். மயிலாடுதுறை மாவட்டம், மாணம்பட்டு பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் ராஜேஷ் (24) கிளீனராக இருந்தாா். செவ்வாய்க்கிழமை அதிகாலை சேலம்-விருத்தாசலம் நெடுஞ்சாலையில் வேப்பூா் அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரத்தில் இருந்த பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த ராஜேஷை அங்கிருந்தவா்கள் மீட்டு வேப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா். விபத்து குறித்து, வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.