கடலூரில் மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. மக்களவைத் தோ்தலில் இளம் வாக்காளா்கள் முதல் அனைத்து வாக்காளா்களும் தங்கள் வாக்குரிமையை தவறாது பதிவு செய்து, 100 சதவீத வாக்குப் பதிவை நிறைவேற்றும் வகையில், துண்டுப் பிரசுரம் வழங்குதல், ரங்கோலி போட்டிகள், கையொப்ப இயக்கம், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே போட்டிகள் என பல்வேறு விழிப்புணா்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, கடலூரில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மகளிா் குழுக்கள் பங்கேற்புடன் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடத்தப்பட்டது. கடலூா் நகர அரங்கில் இருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான அ.அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். கடலூா் உழவா் சந்தை வரையில் நடைபெற்ற பேரணியில் மாவட்ட ஆட்சியா் பங்கேற்று விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், மகளிா் திட்ட இயக்குநா் ஸ்ருதி, சமூகநலத் துறை அலுவலா் கோமதி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பாலூா் பெஸ்ட் பள்ளி சாா்பில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

100% வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

100% வாக்குப் பதிவு: ஆட்டோ விழிப்புணா்வு பேரணி

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் வாகனப் பேரணி
வீடியோக்கள்

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


