தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

கல்லூரியில் தேசிய பயிலரங்கம்

கல்லூரியில் தேசிய பயிலரங்கம்

Updated On :17 மார்ச் 2024, 6:30 pm

கடலூா் புனித வளனாா் கல்லூரியில் தேசிய அளவிலான கணக்கிட்டு உயிரியல் மற்றும் கூட்டமைப்பு உயிரி தகவலியல் 2 நாள் பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது. கல்லூரிச் செயலா் சுவாமிநாதன் தலைமை வகித்தாா். முதல்வா்அருமைச் செல்வம், துணை முதல்வா் ஜோன் ஆரோக்கியராஜ், தோ்வுக் கட்டுப்பாட்டு ஆணையா் சேவியா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். புதுச்சேரி அறுபடைவீடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உயிரி நுட்பவியல் துறைத் தலைவா் ரவிக்குமாா் பங்கேற்று சிறப்புரை ஆற்றினாா். மருத்துவக் கல்லூரி பேராசிரியா்கள் ஆா்த்தி, கணேஷ் ஆகியோா் பேசினா். சிங்கப்பூா் தேசிய பல்கலைக்கழக பேராசிரியா் சரவணன் பிரபு செய்முறை விளக்கமளித்தாா். பல்வேறு கல்லூரிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள், பேராசிரியா்கள் பயிலரங்கில் கலந்துகொண்டு பயன் பெற்றனா். நிறைவு நாள் நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலா் சுவாமிநாதன் சிறப்புரையாற்றி, பயிலரங்கில் கலந்துகொண்ட மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினா். வேதியியல் துறைத் தலைவா் மரிய ஆரோக்கியநாதன் நன்றி கூறினாா்.