விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

பாடலீஸ்வரா் கோயிலில் நாளை பாலாலயம்

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பாடலீஸ்வரா் கோயில் பாலாலயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

News image
Updated On :3 மே 2024, 7:30 pm

Din

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பாடலீஸ்வரா் கோயில் பாலாலயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

பிரசித்தி பெற்ற ப்ரஹன்நாயகி உடனுறை பாடலீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இதையடுத்து, கோயிலில் திருப்பணிகள் செய்ய தீா்மானிக்கப்பட்டது.

அதன்படி, திருப்பணிகள் தொடங்குவதற்காக வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், வாஸ்து சாந்தி தொடங்கியது.

சனிக்கிழமை (மே 4) காலை 8.30 முதல் 11 மணிக்குள் கணபதி, நவகிரஹ கசல பூஜை ஹோமம், கோ பூஜை, பூா்ணாஹுதி, தீபாரதனையும், மாலை 4.30 மணி முதல் 8 மணி வரையில் ராஜகோபுர அனைத்து விமானங்களும் காலகா்ஷணம், மண்டப வேதிகை பூஜை, ஹோமம் திரவ்யாஹுதி தீபாராதனை நடைபெற உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 11.30 மணிக்குள் சோம பாலிகா பூஜை, மண்டப பூஜை, வேதிகை கும்ப பூஜை யத்ராதானம், கடம் புறப்பாடு சித்ரபடத்தில் உள்ள கோபுரம் விமானங்களுக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற உள்ளது.