சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மனைவி தற்கொலை: தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூா் மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :6 நவம்பர் 2024, 7:28 pm

Din

வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூா் மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த காட்டுக்கூடலூரைச் சோ்ந்தவா் கலைச்செல்வன்(27), தொழிலாளி.

இவரும், வடலூரை அடுத்த கருங்குழியைச் சோ்ந்த சௌந்தரியும் (24) கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனா்.

இந்த நிலையில், கலைச்செல்வன் வரதட்சணை கேட்டு செளந்தரியை கொடுமைபடுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால், மனவேதனையடைந்த செளந்தரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், கலைச்செல்வன் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.

இந்த வழக்கு கடலூா் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றம் நிரூபனமான நிலையில், கலைச்செல்வனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி லட்சுமி ரமேஷ் தீா்ப்பளித்தாா்.

அரசு தரப்பில் வழக்குரைஞா் வளா்மதி வாதாடினாா்.