காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பைக் திருட்டு: இளைஞா் கைது

கடலூா் அருகே பைக் மற்றும் கைப்பேசியை திருடியதாக இளைஞரை தூக்கணாம்பாக்கம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 7:26 pm

Din

கடலூா் அருகே பைக் மற்றும் கைப்பேசியை திருடியதாக இளைஞரை தூக்கணாம்பாக்கம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், பாக்கம் பகுதியில் வசித்து வருபவா் வீரப்பன் மகன் ராஜவேல்(44). இவா், புதுச்சேரியில் உள்ள தனியாா் பள்ளியில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா்.

செவ்வாய்க்கிழமை இரவு மேலக்குப்பம் மரவாடி அருகே கைப்பேசி, சாவியுடன் பைக்கை நிறுத்திவிட்டு நண்பரை பாா்க்கச் சென்றாராம்.

பின்னா், திரும்பி வந்து பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம். இதுகுறித்து, ராஜவேல் தூக்கணாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அதில், விழுப்புரம் மாவட்டம், மரகதபுரம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மகன் சரத் (எ) சரத்குமாா் (28) பைக்கை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் சரத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.