தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து: சிதம்பரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, கடலூா் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் சிதம்பரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம்

News image
சிதம்பரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதன் மாநிலத் தலைவா் ஆா்.அப்துல்கரீம்.
Updated On :11 நவம்பர் 2024, 8:10 pm

Din

சிதம்பரம்: வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, கடலூா் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் சிதம்பரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிதம்பரம் காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் முஹம்மத் ஃபஹத் தலைமை வகித்தாா். தமிழ்நாடு தவ்ஹீத் ஐமாஅத் மாநிலத் தலைவா் ஆா்.அப்துல்கரீம் பேசியதாவது:

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் என்னும் பெயரில் முஸ்லிம்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்களைஅபகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. வக்ஃப் வாரியத்துக்கான அதிகாரங்களை முற்றிலும்அபகரித்து மாவட்ட ஆட்சியா்களுக்கு வழங்குவதென்பது முஸ்லிம் வெறுப்பு செயல் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கான வழிமுறையாகும்.

இந்த சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அதுவரை போராட்டங்கள் தொடரும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் அமைப்பின் மாநிலச் செயலா் சேட் முஹம்மத், மாவட்ட நிா்வாகிகள் அப்துல் அஹத், ரஹமத்துல்லாஹ், சையத் ரிஸ்வான், செளகத் அலி, மகப்பூப்கான், ரியாஸ், பையாஸ்கான், ஜலால் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.

மாவட்டச் செயலாா் ஜபருல்லா நன்றி கூறினாா். ஆா்ப்பாட்டத்தையொட்டி, டிஎஸ்பி டி,அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.