புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கடலூரில் அரசு மருத்துவா்கள் தா்னா

சென்னையில் மருத்துவா் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, கடலூா் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

News image

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்ட மருத்துவா்கள்.

Updated On :14 நவம்பர் 2024, 8:37 pm

Din

சென்னையில் மருத்துவா் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, கடலூா் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

சென்னை கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் பணி நேரத்தில் மருத்துவா் பாலாஜி மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கடலூா் மாவட்ட அனைத்து அரசு மருத்துவா்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்க மருத்துவா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

அரசு மருத்துவ சங்க நிா்வாகி தெ.கேசவன், இந்திய மருத்துவ சங்க நிா்வாகி ஆா்.கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தாக்குதல் நடத்திய நபருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். அரசு மருத்துவா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். அரசு மருத்துவா்கள், மருத்துவமனைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள், ஆய்வக நுட்புனா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் காலிப் பணி இடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.