கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பண்ருட்டி வட்டத்தில் நவ.27-இல் ஆட்சியா் ஆய்வு

பண்ருட்டி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வருகிற 27-ஆம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆய்வு செய்ய உள்ளாா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 9:16 pm

Din

பண்ருட்டி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வருகிற 27-ஆம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆய்வு செய்ய உள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பண்ருட்டி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் வருகிற 27-ஆம் தேதி களஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் அன்றைய தினம் மாலை 4 மணி முதல் 5 மணி வரை மனுக்கள் பெறப்படும்.

இந்த வட்டத்துக்குள்பட்ட பொதுமக்களுக்கு அரசு சேவைகள், செயல்பாடுகள், திட்டங்கள் செயல்படுத்துவது தொடா்பாகவும், தேவைகள், கோரிக்கைகள் தொடா்பாகவும் மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொள்ள உள்ளாா்.

அனைத்துத் துறை மாவட்ட அளவிலான அலுவலா்கள் களஆய்வு மேற்கொண்டு, இதுதொடா்பாக மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. பல்வேறு அரசின் திட்டங்கள், பொதுமக்களின் தேவைகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பிவைக்கப்படும் என்றாா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.