வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஐபிஎல் 2026: மார்ச் 17 முதல் பயிற்சியைத் தொடங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்!

நடப்பு ஐபிஎல் சீசனுக்கான பயிற்சியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வருகிற மார்ச் 17 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

News image
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள்- படம் | ராஜஸ்தான் ராயல்ஸ் (எக்ஸ்)
Updated On :13 மார்ச் 2026, 1:10 pm

இணையதளச் செய்திப் பிரிவு

நடப்பு ஐபிஎல் சீசனுக்கான பயிற்சியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வருகிற மார்ச் 17 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனுக்கான முதல் கட்ட போட்டி அட்டவணையை அண்மையில் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டது. அதன் படி, வருகிற மார்ச் 28 ஆம் தேதி நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் நடப்பு ஐபிஎல் சீசனுக்காக தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், வருகிற மார்ச் 17 ஆம் தேதி முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக அந்த அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்காக ராஜஸ்தான் அணி வீரர்கள் அனைவரும் ஜெய்பூருக்கு வரவுள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் இயக்குநராக செயல்பட்டு வரும் குமார் சங்ககாராவின் வழிகாட்டுதலில் வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். அணியில் உள்ள சக வீரர்களுடன் இணைந்து சிறப்பாக செயல்படுவதற்காக பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இதற்கு முன்பாக, சில வீரர்கள் மட்டும் பயிற்சிக்காக முகாமிட்டிருந்த நிலையில், வருகிற மார்ச் 17 ஆம் தேதி முதல் அணியில் உள்ள அனைவரும் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து டிரேடிங் முறையில் வாங்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் இருவரும் மற்ற வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.

எதிர்வரும் ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி குவாஹாட்டியில் வருகிற மார்ச் 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.