கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மஞ்சள் ஜெர்சியில் இது தோனிக்கு கடைசி சீசனாக இருக்கலாம்: இர்பான் பதான்

நடப்பு ஐபிஎல் சீசன் மகேந்திர சிங் தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

News image
மகேந்திர சிங் தோனி- படம் | சென்னை சூப்பர் கிங்ஸ் (எக்ஸ்)
Updated On :13 மார்ச் 2026, 12:31 pm

இணையதளச் செய்திப் பிரிவு

நடப்பு ஐபிஎல் சீசன் மகேந்திர சிங் தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்கொள்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் சீசன் மகேந்திர சிங் தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: மகேந்திர சிங் தோனி இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முழுமையற்றதாக இருக்கும். தோனியை மஞ்சள் நிற ஜெர்சியில் பார்ப்பது இதுவே கடைசி சீசனாக இருக்கலாம். தோனி இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ஐபிஎல் தொடரை நினைத்துப் பார்க்கவே கடினமாக இருக்கிறது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒருங்கிணைப்பதில் தோனி மிக முக்கிய பங்கு வகிப்பார். அவர் எத்தனை போட்டிகளில் விளையாடுவார் என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், அவர் அணியில் இருப்பது அணிக்கு மிகப் பெரிய பலமாக இருக்கும் என்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி அணிக்கு 5 ஐபிஎல் பட்டங்களை வென்று கொடுத்துள்ளார். 44 வயதாகும் அவர், இதுவரை நடைபெற்ற 18 ஐபிஎல் சீசன்களிலும் விளையாடியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.