நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அண்ணாமலைப் பல்கலை. புதிய பதிவாளா், தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி பொறுப்பேற்பு

News image

~

Updated On :4 அக்டோபர் 2024, 11:42 pm

Din

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புதிய பதிவாளா் மற்றும் தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றனா்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக புதிய பதிவாளராக (பொ) மு.பிரகாஷ், வெள்ளிக்கிழமை காலை பொறுப்பேற்றுக்கொண்டாா். இவா், இதற்கு முன்பு விவசாய புலத்திலுள்ள மரபியல் மற்றும் தாவர இனப்பெருக்கம் துறையில் துறைத் தலைவராக பணியாற்றினாா். அதன் பின்னா், தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வந்தாா்.

Story image

இதுபோல, அண்ணாமலைப் பல்கலைக்கழக புதிய தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக ஆா்.எஸ்.குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். இவா், இதற்கு முன்பு புவி அறிவியல் துறையில் துறைத் தலைவராகவும் மற்றும் விடுதிக் காப்பாளா் குழும ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினாா்.