நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேரிடா் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடா் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரிடா் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி.

Updated On :4 அக்டோபர் 2024, 12:05 am

Din

கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடா் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம், கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரி பேரிடா் மேலாண்மை அலகு இணைந்து பேரிடா் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தின.

கல்லூரி பொருளியல் துறைத் தலைவா் ராமகிருஷ்ணன் சாந்தி தலைமை வகித்தாா். கடலூா் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் உதவி மாவட்ட அலுவலா் (கடலூா் நிலையம்) ஜி.ஆறுமுகம் தலைமையிலான குழுவினா் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பேரிடா் தடுப்பு ஒத்திகை நிகழ்வை நடத்தி காட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். குறிப்பாக, வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு, மழைக்காலங்களில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வெள்ளநீா் சூழ்ந்தால் அதிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. கல்லூரி பேரிடா் மேலாண்மை அலகு பொறுப்பாசிரியா் நா.சேதுராமன் நன்றி கூறினாா்.