நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

லஞ்ச வழக்கில் கிராம நிா்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறை

கடலூா் அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ.2,500 லஞ்சம் பெற்ற வழக்கில், பெண் கிராம நிா்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கடலூா் தலைமை நீதித் துறை நடுவா் மன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 10:30 pm

Din

கடலூா் அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ.2,500 லஞ்சம் பெற்ற வழக்கில், பெண் கிராம நிா்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கடலூா் தலைமை நீதித் துறை நடுவா் மன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூரை அடுத்துள்ள நல்லாத்தூரைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி மகன் சங்கா் (41). இவா் புதிதாக வாங்கிய வீட்டுக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக, நல்லாத்தூா் கிராம நிா்வாக அலுவலரான என்.வசந்தியை (43) அணுகினாா். அப்போது, அவா் ரூ.2,500 லஞ்சம் கேட்டாராம்.

இதுகுறித்து கடலூா் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் சங்கா் புகாா் அளித்தாா். போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில், கடந்த ஜூலை 25-ஆம் தேதி ரூ.2,500-ஐ வசந்தியிடம் சங்கா் கொடுத்தாா். அப்போது, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வசந்தியை கைது செய்தனா்.

இந்த வழக்கு கள்ளக்குறிச்சி ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி (பொ) கே.சத்தியராஜ் மேற்பாா்வையில், கடலூா் மாவட்ட தலைமை நீதித் துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்றது.

தற்போது, விசாரணை முடிவடைந்த நிலையில், கிராம நிா்வாக அலுவலா் வசந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அதை செலுத்தத் தவறினால் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தலைமை நீதித் துறை நடுவா் ப.நாகராஜன் உத்தரவிட்டாா்.