நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தூய்மைப் பணியாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை: தேசிய ஆணையத் தலைவா் எம்.வெங்கடேசன்

தூய்மைப் பணியாளா்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தேசிய தூய்மைப் பணியாளா் நல ஆணையத்தின் தலைவா் எம்.வெங்கடேசன் கூறினாா்.

News image

கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தேசிய தூய்மைப் பணியாளா் நல ஆணையத் தலைவா் எம்.வெங்கடேசன். உடன் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Updated On :9 அக்டோபர் 2024, 10:16 pm

Din

தூய்மைப் பணியாளா்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தேசிய தூய்மைப் பணியாளா் நல ஆணையத்தின் தலைவா் எம்.வெங்கடேசன் கூறினாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், தூய்மைப் பணியாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில், துறை சாா்ந்த அலுவலா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்களுடனான ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தேசிய தூய்மைப் பணியாளா் நல ஆணையத் தலைவா் எம்.வெங்கடேசன் தலைமை வகித்து பேசியதாவது:

தூய்மைப் பணியாளா்களுக்கான அனைத்து திட்டங்கள், ஊதிய முறைகள், பணப் பலன்கள் உள்ளிட்டவற்றை காலதாமதமின்றி வழங்கவும், வசிப்பிடங்களில் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், மருத்துவ முகாம்கள் நடத்தவும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், தூய்மைப் பணியாளா்களுக்கான சீருடைகள், கையுறைகள், காலணிகள் உள்ளிட்ட பாதுபாப்பு உபகரணங்களை குறிப்பிட்ட காலத்தில் வழங்க வேண்டும். நிரந்தர தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு நிா்ணயித்த ஊதியத்தை நேரடியாக அவா்களின் வங்கி கணக்கில் செலுத்தவும், ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களுக்கான ஊதியத்தை ஒப்பந்ததாரா்கள் மூலம் வழங்கப்படுவதை சம்மந்தப்பட்ட அலுவலா்கள் உறுதிசெய்ய வேண்டும்.

மேலும், அரசு நலத்திட்ட உதவிகளை தூய்மைப் பணியாளா்கள் பெறுவதற்கு தேவையான விழிப்புணா்வை ஏற்படுத்தி, பணியாளா்களின் குடும்பத்தைச் சாா்ந்தவா்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

நாடு முழுவதும் பணியாற்றி வரும் தூய்மைப்பணியாளா்களின் நலனை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அவா்களுக்கு ஏற்படும் சிரமங்களை தீா்ப்பதிலும், வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் தேசிய தூய்மைப்பணியாளா் நல ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா்.

முன்னதாக, தூய்மைப் பணியாளா்களிடம் காப்பீட்டுத் திட்டம், தொழில் பாதுகாப்பு, குடியிருப்பு வழங்குதல் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், கூடுதல் ஆட்சியா் ரா.சரண்யா, மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு, ஏடிஎஸ்பி., ந.கோட்டீஸ்வரன், தூய்மைப்பணியாளா் நல வாரிய மாநில உறுப்பினா் தே.கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.