நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய இடங்களில் அதிகாரிகள் கண்காணிப்பு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

கடலூா் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய 239 இடங்களை அதிகாரிகள் கண்காணித்து வருவதாக வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

News image

கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம்.

Updated On :15 அக்டோபர் 2024, 6:35 pm

Din

கடலூா் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய 239 இடங்களை அதிகாரிகள் கண்காணித்து வருவதாக வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வடகிழக்கு பருவமழை 2024 முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். மாவட்ட கண்காணிப்பு அலுவலா் த.மோகன், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன், கடலூா் மேயா் சுந்தரி, துணை மேயா் பா.தாமரைசெல்வன், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், கூடுதல் ஆட்சியா் ரா.சரண்யா, கடலூா் மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு, எஸ்பி ரா.ராஜாராம் மற்றும் அனைத்துத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.

இதையடுத்து, அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாவட்டத்தில் 239 இடங்கள் வெள்ளம் பாதிக்கப்படக்கூடிய இடமாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கு, அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது. அக்டோபா், நவம்பா் மாதத்தில் பிரசவிக்கும் கா்ப்பிணிகள் தொடா்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், அவா்களை கண்காணித்து பிரசவ வலி நேரத்தில் மருத்துவமனையில் சோ்க்க பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேளாண் துறையில் பாதிக்கப்படும் இடத்தில் துறைச் சாா்ந்த அதிகாரிகள் இருக்க வேண்டும். ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பாதிப்புகள் குறித்து புகாா் தெரிவிக்கலாம். வீராணம் ஏரியில் அதிகம் தண்ணீா் தேக்காமல் நீா்வளத்துறை அதிகாரிகளைக் கொண்டு கண்காணித்து வருகிறோம். என்எல்சி நிறுவனத்தின் சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் காவல் மற்றும் ஊா்க்காவல் படை, தீயணைப்பு, நெடுஞ்சாலைத்துறையினரால் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள படகு, மோட்டாா் பம்புகள் உள்ளிட்டவற்றை அமைச்சா் பாா்வையிட்டாா்.