டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

கடலூா் மாவட்ட காவல் துறை சாா்பில் பாலியல் குற்றங்களில் இருந்து ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற விழிப்புணா்வுப் பேரணி

News image
கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி.
Updated On :22 அக்டோபர் 2024, 8:13 pm

Din

நெய்வேலி: கடலூா் மாவட்ட காவல் துறை சாா்பில் பாலியல் குற்றங்களில் இருந்து ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருப்பாதிரிப்புலியூா் ஜவான் பவன் அருகே தொடங்கிய பேரணியை கடலூா் ஏடிஎஸ்பி., கோடீஸ்வரன், டிஎஸ்பி., ரூபன்குமாா் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவிகள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு முக்கியச் சாலைகள் வழியாக விழிப்புணா்வு ஏற்படுத்தியவாறு கடலூா் நகர அரங்கை அடைந்தனா்.

இதில், மாவட்ட சமூக நல அலுவலா் சித்ரா, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் சுந்தா், மாவட்ட குழந்தைகள் நல குழுத் தலைவா் லட்சுமி வீரராகவலு, காவல் ஆய்வாளா்கள் வள்ளி, தீபா, ஜோதி, பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.