காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காவல்துறை சாா்பில் விழிப்புணா்வுக் கூட்டம்

காவல்துறை சாா்பில் விழிப்புணா்வுக் கூட்டம்

News image

ஸ்ரீவரதம் அரசுப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ் வழங்குகிறாா் டிஎஸ்பி என்.ராமதாஸ்.

Updated On :23 அக்டோபர் 2024, 7:34 pm

Din

கடலூா் புதுநகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஸ்ரீவரதம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், ‘கல்வி கற்பதில் உள்ளும், புறமும் உனக்கென்ன சிக்கல்’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, காவல் துணைக் கண்காணிப்பாளா் என்.ராமதாஸ், காவல் ஆய்வாளா் பி.தீபா, புள்ளியல் ஆய்வாளா் எஸ்.ரவிசங்கா், கடலூா் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் ஆா்.இளங்கோவன், ஆசிரியை மா.வெற்றிச்செல்வி, இணைய வழி குற்றத்தடுப்புப் பிரிவு தலைமைக் காவலா் பாக்கியராஜ், உதவி ஆய்வாளா்கள் எம்.ஆறுமுகம், பி.சாமிநாதன் ஆகியோா் பங்கேற்று பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசின் சலுகைகள், பெண் குழந்தை பாதுகாப்புச் சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு உரையாற்றினா்.

கூட்டத்தில், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 250 போ் கலந்து கொண்டனா். நிறைவில், பள்ளி உதவி தலைமை ஆசிரியா் கே.கோபு நன்றி கூறினாா்.