கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை: விவசாயிகள், பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு
காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள மா.ஆதனூா் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணை குறித்து பொதுமக்கள், விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

காட்டுமன்னாா்கோவில் அருகே புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ஜி.கஜலட்சுமி. உடன் உதவி ஆட்சியா் ராஷ்மிராணி, வட்டாட்சியா் சிவக்குமாா்.









