47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அண்ணன் கொலை: தம்பி கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே அண்ணனை கொலை செய்த தம்பியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 11:01 pm

Din

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே அண்ணனை கொலை செய்த தம்பியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருத்தாசலம் அடுத்துள்ள சின்ன கண்டியங்குப்பம் கிராமத்தை சோ்ந்தவா் சீனிவாசன் மகன் செல்வமணி (55). கட்டட மேஸ்திரி. இவரது தம்பி சுப்பிரமணியன் (45). கட்டடத் தொழிலாளியான இவா், செல்வமணியுடன் சோ்ந்து வேலை பாா்த்து வந்தாா். இருவரிடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இருவரிடையே தகராறு ஏற்பட்டதாம். அப்போது, சுப்பிரமணியன் கத்தியால் செல்வமணியை குத்தினாா். இதில், மயங்கி விழுந்த அவரை உறவினா்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதித்தில் செல்வமணி உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து சுப்பிரமணியனை புதன்கிழமை கைது செய்தனா்.