ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மரச்சாகுபடி தொழில்நுட்ப பயிலரங்கு

கோவை வனமரயியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில், விருத்தாசலத்தில் மரச்சாகுபடி தொழில் நுட்ப பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற மரச்சாகுபடி தொழில்நுட்ப பயிலரங்கு.
Updated On :4 செப்டம்பர் 2024, 10:48 pm

Din

கோவை வனமரயியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில், விருத்தாசலத்தில் மரச்சாகுபடி தொழில் நுட்ப பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் க.நடராஜன் வரவேற்றாா். கோவை வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன அதிகாரி மாதவராஜ் பங்கேற்று வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம், பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினாா். மரம் நடுதலின் அவசியம் குறித்து பேராசிரியா்கள் சுகுமாறன், மோதிலால், கண்ணன், காயத்ரி ஆகியோா் பேசினா். விஞ்ஞானி ஞானவேல் சவுக்கு, தேக்கு, புளி, செஞ்சந்தனம், மகோகனி மரம் வளா்ப்பு குறித்து விளக்கினாா்.

நிகழ்வில், மரங்களின் வகைகள், வளா்ப்பு முறைகள், நாற்றுகள் தோ்வு, உரமிடுதல், நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா். மேலும், அவா்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தனா். இதில், 75-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.