ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கூழாங்கற்கள் கடத்தல்: டிப்பா் லாரி பறிமுதல்

விருத்தாசலம் அருகே கூழாங்கற்களைக் கடத்தி வந்ததாக டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :6 செப்டம்பர் 2024, 1:21 am

Din

விருத்தாசலம் அருகே கூழாங்கற்களைக் கடத்தி வந்ததாக டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விருத்தாசலம் பகுதியில் இருந்து கூழாங்கற்கள் கடத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து, புவியியல், சுரங்கத் துறை உதவி இயக்குநா் ரமேஷ்குமாா் வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் விருத்தாசலம் ஆலடி சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது அதன் ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா். பின்னா், டிப்பா் லாரியை சோதனையிட்டதில் அனுமதியின்றி 3 அலகு கூழாங்கற்கள் ஏற்றி வந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து ரமேஷ்குமாா் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மணல் திருட்டு: புதுப்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் மாசிலாமணி மற்றும் போலீஸாா் திருத்துறையூா் மலட்டாறு பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அனுமதியின்றி சரக்கு வாகனத்தில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த பண்ருட்டி பூங்குணம் பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் சிவனேசன்(28), திருத்துறையூா் பகுதியைச் சோ்ந்த புண்ணியமூா்த்தி மகன் ருத்ரா (31) ஆகியோா் போலீஸாரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடினா்.

போலீஸாா் சரக்கு வகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனா்.