ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் நோயாளிகளுக்கு பழங்கள் அளிப்பு

சிதம்பரத்தில் மீலாது நபியையொட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் காமராஜா் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு பிரட் மற்றும் பழங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

News image
சிதம்பரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பழங்களை வழங்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிா்வாகிகள்.
Updated On :18 செப்டம்பர் 2024, 7:03 pm

Din

சிதம்பரத்தில் மீலாது நபியையொட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் காமராஜா் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு பிரட் மற்றும் பழங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

சிதம்பரம் நகரச் செயலா் இ.மஹபூப்ஹுசைன் தலைமை வகித்தாா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலா் அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தாா். சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 150-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளுக்கு தலைமை மருத்துவா் லட்சுமி முன்னிலையில் நிா்வாகிகள் பிரட் மற்றும் பழங்கள் வழங்கினா். பிறந்த குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

தொடா்ந்து, சிதம்பரம் மாரியப்பா நகரில் உள்ள முதியோா் இல்லம், சிதம்பரம் புறவழிச் சாலையில் உள்ள மன வளா்ச்சி குன்றிய மாணவா்கள் இல்லம் மற்றும் முதியோா் இல்லத்தில் உள்ளவா்களுக்கு பிரட், பழங்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

நிகழ்வில், சிதம்பரம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் அன்வா் அலி, பொருளாளா் ஷாஹுல் ஹமீது பாகவி, ரோட்டேரியன் பி.முஹம்மது யாசின் ஹாஜியாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.